மன்னாரில் 15 நாட்களில் 328 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
-குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,
-மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (15) மேலும் 25 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கடந்த 15 நாட்களில் மன்னார் மாவட்டத்தில் 328 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வருடம் 2704 தொற்றாளர்களும்,தற்போது வரை 2721 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
-
மாவட்டத்தில் தற்போது வரை 25 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளது.என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை தலைமன்னார் பகுதி தபாலகத்தில் கடமை புரியும் ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ஆன்டிஜென் பரிசோதனையில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் தபாலகம் மூடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் மன்னார் பகுதியில் தபால் திணைக்கள உத்தியோகத்தர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து தலைமன்னார் பகுதி தபாலகத்தை சேர்ந்தவர்களுக்கு நேற்று திங்கட்கிழமை (15) காலை தலை மன்னார் வைத்தியசாலையில் ஆன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தலைமன்னார் தபாலகத்தில் கடமையாற்றும் 07 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தலைமன்னார் தபாலகம் உப தபாலகங்கள் நேற்று திங்கட்கிழமை மதியம் 12 மணியுடன் மூடப் பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
மன்னாரில் 15 நாட்களில் 328 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Reviewed by Author
on
November 16, 2021
Rating:
No comments:
Post a Comment