அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டச் செயலகத்தில் சிறப்பாக இடம் பெற்ற திருவள்ளுவர் விழா மற்றும்,மன்னார் மாவட்ட கீதம் வெளியீட்டு விழா.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் மன்னார் மாவட்டச் செயலகமும்,மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவை யும் இணைந்து ஏற்பாடு செய்த திரு வள்ளுவர் விழா மற்றும்,மன்னார் மாவட்ட கீதம் வெளியீட்டு விழாவும் இன்று செவ்வாய்க்கிழமை (16) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. -மன்னார் மாவட்டச் செயலகத்தின் கலாச்சார உத்தியோகத்தர் இரத்திணம் நித்தியானந்தன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமல் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். 

இதன் போது மன்னார் மாவட்டச் செயலக நுழைவாயிலில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு,மண்டபம் வரை திருவள்ளுவர் சிலை பவனியாக கொண்டு வரப்பட்டது. -இதனை தொடர்ந்து நிகழ்வுகள் இடம் பெற்றதோடு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் வருகை தந்த விருந்தினர்கள்,கலைஞர்கள் இணைந்து மன்னார் மாவட்ட கீதம் வெளியீடு செய்தனர்.

 -அதனைத்தொடர்ந்து சிறப்பு நிகழ்வுகள் இடம் பெற்றதோடு,திருவள்ளுவர் விழாவையொட்டி நடைபெற்ற நிகழ்வகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், இளம் கலைஞர்களுக்கும் பரிசில்கள் மற்றும் வெற்றி கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். -குறித்த நிகழ்வில் மதத்தலைவர்கள் உள்ளடங்களாக பிரதேச செயலாளர்கள்,கலைஞர்கள்,திணைக்களத் தலைவர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.  

























மன்னார் மாவட்டச் செயலகத்தில் சிறப்பாக இடம் பெற்ற திருவள்ளுவர் விழா மற்றும்,மன்னார் மாவட்ட கீதம் வெளியீட்டு விழா. Reviewed by Author on November 16, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.