அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரிலும் 12 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

தலைமன்னார் கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் தலைமன்னார் கடற்படையினரால் இன்று ஞாயிற்றுகிழமை (19) காலையில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் இராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களே மேற்படி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 இரண்டு ரோலர் படகுகளில் வருகை தந்த மொத்தம் 12 மீனவர்களை தலைமன்னார் கடற்படையினர் கைது செய்து தாழ்வுபாடு கடற்படை முகாமில் தடுத்து வைத்த நிலையில் இன்று ஞாயிற்றுகிழமை இரவு 8 மணியளவில் மன்னார் நீரியல் வள திணைக்களத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர் மேலதிக விசாரணையின் பின்னர் குறித்த 12 மீனவர்களும் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்




மன்னாரிலும் 12 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது Reviewed by Author on December 20, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.