அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சாரணர் சங்கத்தால் சிரமதானம் முன்னெடுப்பு

மன்னார் மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பொது வைத்தியசாலையில் மாபெரும் சிரமாதான பணி இன்று ஞாயிற்றுக்கிழமை(19) காலை 10 மணியளவில் இடம் பெற்றது பெருகி வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்குடன், மன்னார் மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் சிரமாதான பணி இடம் பெற்றது 

சாரண சங்க தலைவரின் வேண்டுகோளுக்கு அமைவாக ,DR.சில்வா அவர்களின் வழிகாட்டலில் மாவட்ட ஆணையாளரின் தலைமையில் சிரமதான பணிகள் இடம்பெற்றது. இச்சிரமதான பணியில் மன்னார் மாவட்ட சாரண சங்க அங்கத்தவர்கள் மற்றும் மன்னாரில் பிரசித்தி பெற்ற பாடசாலைகளான மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை , மன் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி தேசிய பாடசாலை சாரணர்கள் மற்றும் மன்னார் மாவட்ட திரிசாரணர்கள் ஆகியோரும் இவ் சிரமாதான பணியில் கலந்து கொண்டனர்.











மன்னார் சாரணர் சங்கத்தால் சிரமதானம் முன்னெடுப்பு Reviewed by Author on December 20, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.