அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் வீதி நாடகம் ஊடாக கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுப்பு.

நாடளாவிய ரீதியில் கொவிட்- 19 தொற்றின் 'ஓமிக்ரோன்' திரிவின் பரவலானது அதிகரித்து காணப்படும் நிலையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மன்னார் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டின் மன்னாரின் பல பாகங்களிலும் விழிப்புணர்வு வீதி நாடகம் இடம்பெற்றது. -இன்று வெள்ளிக்கிழமை (17) காலை 11 மணியளவில் மன்னார் பேரூந்து தரிப்பிடத்தில் குறித்த வீதி நாடகம் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின்; வேண்டுகோளிற்கு அமைவாக மன்னார் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டின் அதன் மாவட்ட இணைப்பாளர் ஏ.திலீபன் தலைமையில் இடம்பெற்றது. 

 குறித்த வீதி நாடகத்தின் போது பார்வையாளர்களுக்கு முகக் கவசங்கள் அணிந்து கொள்வதன் முக்கியத்துவம், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதன் அவசியம், கை கழுவுவதன் முக்கியத்துவம் மற்றும் கொவிட்-19 தடுப்பூசியின் மூன்று டொஸ்களையும் பெற்று கொள்வதற்கான அவசியம் தொடர்பான விழிப்புணர்வு கருத்துக்களும் குறித்த வீதி நாடகத்தின் ஊடாக தெளிவுபடுத்தப்பட்டது. குறித்த வீதி நாடகம் மன்னார் பேருந்து நிலையம் , வைத்தியசாலை மற்றும் பொது இடங்களில் இடம் பெற்றது. 

 பேசாலை மூவிராசாக்கள் பட்டினம் கலைப்பட்டறை கலைஞர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட விழிப்புணர்வு வீதி நாடக நிகழ்வில் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பொலிஸ் உத்தியோகத்தர், ஊடகவியலாளர்கள், மற்றும் மன்னார் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தில் பணியாற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.










மன்னாரில் வீதி நாடகம் ஊடாக கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுப்பு. Reviewed by Author on December 17, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.