அண்மைய செய்திகள்

recent
-

களுகமுவ பிரதேசத்தில் நீரில் மூழ்கி ஒருவர் பலி - தாயும் குழந்தையும் மாயம்!

பேராதனை, களுகமுவ பிரதேசத்தில் மகாவலி ஆற்றில் நீராட சென்ற ஐவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இவர்களுள் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 20 வயதுடைய பெண்ணும் 2 வயது குழந்தையும் காணாமல் போயுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளுமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 இந்த விபத்து நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளது. பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து ஆண் ஒருவரையும் சிறுவன் ஒருவரையும் மீட்டு கம்பளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். உயிரிழந்தவர் கண்டி, மாபானாவதுர பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காணாமல் போனவர்களைக் தேடும் பணியை பொலிஸ் உயிர்காக்கும் படையினர், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

களுகமுவ பிரதேசத்தில் நீரில் மூழ்கி ஒருவர் பலி - தாயும் குழந்தையும் மாயம்! Reviewed by Author on December 06, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.