அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் அடம்பனைச் சேர்ந்த கம்பிகளின் மொழி பிரேம் எழுதிய 'பொன்னான பரிசு' நூல் வைபவ ரீதியாக வெளியீட்டு வைப்பு.

மன்னார் அடம்பனைச் சேர்ந்த கம்பிகளின் மொழி பிரேம் எழுதிய 'பொன்னான பரிசு' நூல் வெளியீட்டு விழா இன்று திங்கட்கிழமை (13) காலை 10.30 மணியளவில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் பண்ணையில் இடம் பெற்றது. குறித்த நிகழ்வானது அதிபர் என்.நாகேந்திர ராசா தலைமையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் கலந்து கொண்டார். 

இதன் போது கம்பிகளின் மொழி பிரேம் எழுதிய 'பொன்னான பரிசு' நூல் வெளியீட்டு விழா வைபவ ரீதியாக இடம் பெற்றது. நூலாசிரியருடன் இணைந்து குறித்த நூலினை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் மற்றும் விருந்தினர்கள் இணைந்து வைபவ ரீதியாக வெளியீடு செய்து வைத்தனர்.











மன்னார் அடம்பனைச் சேர்ந்த கம்பிகளின் மொழி பிரேம் எழுதிய 'பொன்னான பரிசு' நூல் வைபவ ரீதியாக வெளியீட்டு வைப்பு. Reviewed by Author on December 13, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.