அண்மைய செய்திகள்

recent
-

தலை மன்னார் மேற்கில் வன வளத்திணைக்களத்தினரின் காணி அளவிடும் நடவடிக்கைகளுக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு-காணி அளவீட்டு பணிகளை கை விட்டு சென்றனர்.

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தலைமன்னார் மேற்கு பகுதியில் இன்று திங்கட்கிழமை (13) காலை வன வளத் திணைக்களத்தினரின் காணி அளவிடும் நடவடிக்கைகளுக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மன்னார் – தலைமன்னார் மேற்குப் பகுதியில் வனவளத் திணைக்களத்தினரின் காணி அளவிடும் நடவடிக்கை இன்று திங்கட்கிழமை (13) காலை இடம் பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. குறித்த பகுதிக்கு வனவளத் திணைக்களத்தினர் காணிகளை அளவிடுவதற்காக சென்றிருந்தனர்.

 இதன்போது அங்கு ஒன்று கூடிய குறித்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர். குறிப்பாக காணி அளவிடும் பணிகளை கைவிட்டு அங்கிருந்து செல்ல வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தியிருந்தனர். இதனைத் தொடர்ந்து வன வளத்திணைக்களத்தினருக்கும், தலைமன்னார் பங்குத்தந்தை அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் மற்றும் பொதுமக்களின் பிரதிநிதிகளுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் இடம் பெற்றிருந்தது. குறித்த கலந்துரையாடலினைத் தொடர்ந்து வன வளத்திணைக்களத்தினர் காணி அளவீட்டு பணிகளை கைவிட்டு அங்கிருந்து சென்றுள்ளதாக அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தெரிவித்தார்.





தலை மன்னார் மேற்கில் வன வளத்திணைக்களத்தினரின் காணி அளவிடும் நடவடிக்கைகளுக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு-காணி அளவீட்டு பணிகளை கை விட்டு சென்றனர். Reviewed by Author on December 13, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.