புலமைப்பரிசில் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புகளுக்கு இன்று (18) நள்ளிரவு முதல் தடை
பரீட்சை நிறைவடையும் வரை பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளை நடத்துதல், ஒழுங்குபடுத்தல், பாடங்கள் தொடர்பான விரிவுரைகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளை நடத்துதல், குறித்த பரீட்சைகள் தொடர்பான மாதிரி வினாப்பத்திரங்களை அச்சிடுதல், விநியோகித்தல், பரீட்சைகள் தொடர்பான அனுமான வினாக்களை வழங்குதல் அதுபோன்ற மாதிரி வினாக்களை வழங்குதல், சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள், பதாகைகள் போன்றவற்றை நேரடியாக அல்லது இலத்திரனியல் ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் ஊடாக வெளியிடுதல், அவ்வாறானவற்றை வைத்திருத்தல் ஆகியன குற்றங்களாகும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புகளுக்கு இன்று (18) நள்ளிரவு முதல் தடை
Reviewed by Author
on
January 18, 2022
Rating:
No comments:
Post a Comment