அண்மைய செய்திகள்

recent
-

உண்மையை காணவும் பேசவும் முன்னே வாருங்கள் சர்வ மதத்தலைவர்களுடனான விசேட கருத்து பகிர்வு நிகழ்வு மன்னாரில்

மத சகவாழ்வை பலப்படுத்துவதனூடாக ஒரு பன்மைத்துவ சமூகத்தை கட்டியெழுப்புவோம் எனும் தொணிப்பொருளில் தேசிய சமாதான பேரவையின் அணுசரணையில் தொடர்பாடலுக்கான நிலையம்(CCT) ஒழுங்கமைப்பில் மன்னார் பிரதேச சர்வ மத குழுவினரின் ஏற்பாட்டில் “உண்மையை காணவும் பேசவும் முன்னே வாருங்கள்” எனும் தொணிப்பொருளிலாம விசேட கருத்தமர்வு மன்னார் தேசிய சமாதான பேரவையின் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் மெடோசன் பெரேரா மேற்பார்வையில் தொடர்பாடலுக்கான நிலையத்தின் இணைப்பாளர் ஜோண்சன் தலைமையில் இன்று திங்கட்கிழமை மன்னார் தனியார் விருந்தினர் விடுதியில் காலை 10 மணியளவில் இடம் பெற்றது 

 மத ரீதியான பிளவு மற்றும் இன மத முரண்பாடுகள் தொடர்பாக மதத்தலைவர்களின் நிலைப்பாடு மற்றும் அவர்களின் ஆலோசணைகளை வெளிக்கொண்டு வரும் முகமாக குறித்த விசேட கருத்தமர்வு மற்றும் விவாத நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டு இடம் பெற்றது பிரதேச ரீதியாக இடம் பெறும் சிலை உடைப்புக்கள், மத சின்னங்கள் புறக்கணிக்கப்படுகின்றமை, மத தலைவர்கள் மத்தியிலான முரண்பாடு,வெருப்பு பேச்சு,சமூக ஊடகங்களின் தற்போதைய நிலை போன்றவை தொடர்பான விடயங்களில் மத தலைவர்கள் மற்றும் சர்வமத குழுவினரின் வகிபாகம் தொடர்பாக பூரண தெளிவுபடுத்தல் குறித்த நிகழ்வின் ஊடாக பகிரப்பட்டது குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு மதங்களை சேர்ந்த மததைவர்கள்,அரச அதிகாரிகள்,ஊடகவியளாலர்கள் மற்றும் மன்னார் சர்வ மத குழு அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்










உண்மையை காணவும் பேசவும் முன்னே வாருங்கள் சர்வ மதத்தலைவர்களுடனான விசேட கருத்து பகிர்வு நிகழ்வு மன்னாரில் Reviewed by Author on January 24, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.