அண்மைய செய்திகள்

recent
-

தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் முன்னெடுப்பு : சுகாதார அமைச்சர்

பொது இடங்களில் கொவிட் -19 தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். QR குறியீடு மற்றும் விண்ணப்பத்தை வழங்குவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித் தார். தடுப்பூசிகளை கட்டாயமாக்க முடியாத நிலையில், பொது இடங்களுக்குப் பிரவேசிக்கும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க முடியும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

பொதுச் சுகாதார பரிசோதகர்களுடனான கலந்துரை யாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை, தற்போது மாகாண சபைகளின் கட்டுப்பாட்டிலுள்ள பல வைத்தியசாலைகளை உரிய அமைச்சின் கீழ் கையகப்படுத்துவது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றது. நாளாந்தம் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளி களின் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஆகியவற்றை கருத்திற் கொண்டு மக்களின் சுகாதார சேவைகளை மேம்படுத்தும் வகையில் நாட்டிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளை அரசாங்கம் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் முன்னெடுப்பு : சுகாதார அமைச்சர் Reviewed by Author on January 05, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.