அண்மைய செய்திகள்

recent
-

மின் வெட்டு குறித்து அண்மைய அறிவிப்பு

இலங்கை மின்சார சபை உறுதியளித்தபடி எரிபொருளை வழங்கினால் இன்று மின்வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எரிபொருள் பற்றாக்குறையால் நேற்றைய தினம் செயலிழந்திருந்த அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதால் இன்று மின்வெட்டு அவசியமில்லை எனவும் சபை தெரிவித்துள்ளது. 

நேற்றைய தினம் எரிபொருள் விநியோகம் செய்யப்பட்ட போதிலும், அதனை மின் உற்பத்தி நிலையங்களுக்குச் செலுத்த பல மணித்தியாலங்கள் தேவைப்பட்டதுடன் நாடு முழுவதும் நேற்று பிற்பகல் மின்சார விநியோகம் அவ்வப்போது துண்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மின் வெட்டு குறித்து அண்மைய அறிவிப்பு Reviewed by Author on January 20, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.