கனியவள அகழ்வுக்கு எதிராக மன்னாரில் பல இடங்களில் விழிப்புணர்வு பதாதைகள்
அவுஸ்ரேலிய நிறுவனம் ஒன்று குறித்த தைய்தனியம் அகழ்வுக்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும் முதற்கட்டமாக மன்னாரில் பேசாலை தலைமன்னார் உட்பட பல பகுதிகளில் மணலுக்கு அடியில் பல மீற்றர்கள் குழி தோண்டப்பட்டு மாதிரிகள் சேகரிப்பட்டு வருவதாகவும் அவற்றை உடனடியா நிறுத்த கோரி மன்னாரின் சுற்றாடலை பாதுகாக்கும் அமைப்பினர் மும் மொழிகள் அடங்கிய குறித்த பதாதைகளை பிரதான பேரூந்து நிலையம்,வைத்தியசாலை சந்தி,மடு சந்தி உட்பட பல பகுதிகளில் காட்சிப்படுத்தியுள்ளனர்
மேற்படி காட்சிப்படுத்தப்பட்ட சில பதாதைகள் சில இடங்களில் கனிய வள அகழ்வுடன் சம்மந்தப்பட்ட விசமிகளால் கிழிக்கப்பட்டுளையும் குறிப்பிடதக்கது
கனியவள அகழ்வுக்கு எதிராக மன்னாரில் பல இடங்களில் விழிப்புணர்வு பதாதைகள்
Reviewed by Author
on
January 24, 2022
Rating:

No comments:
Post a Comment