அண்மைய செய்திகள்

recent
-

கனியவள அகழ்வுக்கு எதிராக மன்னாரில் பல இடங்களில் விழிப்புணர்வு பதாதைகள்

மன்னார் மாவட்டத்தில் உள்ள கரையோற பகுதிகளில் இடம் பெறும் சட்ட விரோத கனியவள அகழ்வு மற்றும் ஆய்வுகளை உடனடியாக நிறுத்த கோரி மன்னாரின் சுற்றாடலை பாதுகாக்கும் அமைப்பின் ஒழுங்கமைப்பில் பொது இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன மன்னார் கடற்கரையோரங்களில் காணப்படும் மணல்களில் மிகவும் விலை உயர்ந்த அரிதான தைய்தனியம் எனும் கனிமம் அதிகளவு காணப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த தைத்தனியத்தை அகழ்வு செய்யும் பணிகள் சட்ட விரோதமாக இடம் பெறுவதை தடுக்க கோரி குறித்த விழிப்புணர்வு பதாதைகள் மேற்படி பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன

 அவுஸ்ரேலிய நிறுவனம் ஒன்று குறித்த தைய்தனியம் அகழ்வுக்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும் முதற்கட்டமாக மன்னாரில் பேசாலை தலைமன்னார் உட்பட பல பகுதிகளில் மணலுக்கு அடியில் பல மீற்றர்கள் குழி தோண்டப்பட்டு மாதிரிகள் சேகரிப்பட்டு வருவதாகவும் அவற்றை உடனடியா நிறுத்த கோரி மன்னாரின் சுற்றாடலை பாதுகாக்கும் அமைப்பினர் மும் மொழிகள் அடங்கிய குறித்த பதாதைகளை பிரதான பேரூந்து நிலையம்,வைத்தியசாலை சந்தி,மடு சந்தி உட்பட பல பகுதிகளில் காட்சிப்படுத்தியுள்ளனர் மேற்படி காட்சிப்படுத்தப்பட்ட சில பதாதைகள் சில இடங்களில் கனிய வள அகழ்வுடன் சம்மந்தப்பட்ட விசமிகளால் கிழிக்கப்பட்டுளையும் குறிப்பிடதக்கது
                 








கனியவள அகழ்வுக்கு எதிராக மன்னாரில் பல இடங்களில் விழிப்புணர்வு பதாதைகள் Reviewed by Author on January 24, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.