அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இலங்கையின் 74 வது சுதந்திர தின நிகழ்வு.

இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 74 வது சுதந்திர தின விழா இன்று வெள்ளிக்கிழமை (4) மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றது. இன்று வெள்ளிக்கிழமை (4) காலை 8 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலக பணியாளர்கள் மன்னார் பஸார் பகுதியில் இருந்து மாவட்ட செயலகம் வரை தேசியக் கொடியை ஏந்தியவாறு அணி நடையாக மாவட்டச் செயலகம் வரை சென்றனர். இதனைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 

 தொடர்ந்து நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்கள் மற்றும் ஏனையவர்காளுக்காக 2 நிமிட மௌன பிராத்தனையும் இடம் பெற்ற தோடு, நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் சர்வமத பிரார்த்தனைகள் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து சர்வமத நிகழ்வு இடம்பெற்றதோடு, பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.இறுதியாக ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் கீழ் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் நிகழ்வில் சர்வமத தலைவர்கள்,உதவி அரசாங்க அதிபர், பொலிஸ், இராணுவ,கடற்படை உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், வலயக்கல்வி பணிப்பாளர்கள்,மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலக பணியாளர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
              
















மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இலங்கையின் 74 வது சுதந்திர தின நிகழ்வு. Reviewed by Author on February 04, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.