அண்மைய செய்திகள்

recent
-

135 இந்தியப் படகுகள் இன்று ஏலத்தில் விற்பனை!



யாழ்ப்பாணம் காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 135 இந்தியப் படகுகள் நேற்று (திங்கட்கிழமை) ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன. இதன்போது 88அடி நீளமான மீன்பிடிப் படகொன்று அதிக தொகையாக 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. கொழும்பில் இருந்து வந்த கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள தலைமையக அதிகாரிகள் குழு காரைநகரில் ஏலத்தில் விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ள படகுகளை கடந்த ஒருவாரமாக அதிகமனோர் பார்வையிட்ட நிலையில் இன்றைய தினமும் பலரும் பார்வையிட்டனர். 

 இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்தவர்கள் ஏலத்தில் ஆரம்ப வைப்பு தொகையாக 1,000 ரூபாய் பணத்தை செலுத்தி ஏலத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இலங்கையின் 5 துறைமுகங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களிற்குச் சொந்தமான மீன்பிடிப் படகுகள் இன்று முதல் 5 இடங்களில் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது.                                                              
135 இந்தியப் படகுகள் இன்று ஏலத்தில் விற்பனை! Reviewed by Author on February 08, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.