அண்மைய செய்திகள்

recent
-

சுதந்திர தினத்தையொட்டி மன்னாரில் பொலிஸாரின் ஏற்பாட்டில் இடம் பெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ்வு.

இலங்கையின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நாகாவத்த தலைமையில் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,தாராபுரம் கோரைக்குளம் பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (4) காலை இடம்பெற்றது. 

 உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரபாத் விதானகே , மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் ஜெயதிலக மற்றும் மன்னார் பொலிஸார் இணைந்து குறித்த பகுதியில் 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் கலந்து கொண்டதோடு பிரதேச செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்கள் கலந்து கொண்டு இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நாட்டி வைத்த மையும் குறிப்பிடத்தக்கது.
               








சுதந்திர தினத்தையொட்டி மன்னாரில் பொலிஸாரின் ஏற்பாட்டில் இடம் பெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ்வு. Reviewed by Author on February 04, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.