அண்மைய செய்திகள்

recent
-

தலவாக்கலை குடும்பஸ்தர் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

தலவாக்கலை – மடக்கும்புர, வடக்கிமலை பிரிவில் கடந்த 05 ஆம் திகதி இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குடும்பங்களுக்கு இடையில் பணக் கொடுக்கல், வாங்கலினால் ஏற்பட்ட முறுகலில் 30 வயதுடைய குடும்பஸ்தர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 

 தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் தலைமறைவாகியிருந்ததுடன், கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் வனப்பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் 04 நாட்களின் பின்னர் நேற்று (09) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரவித்தனர். சந்தேகநபர் இன்று (10) நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தில் உயிரிழந்தவரின் பூதவுடல் தோட்ட பொது மயானத்தில் நேற்று (09) நல்லடக்கம் செய்யப்பட்டது

தலவாக்கலை குடும்பஸ்தர் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது Reviewed by Author on February 10, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.