அண்மைய செய்திகள்

recent
-

அத்துமீறி 3 படகுகளில் நெடுந்தீவு கடற்பரப்பினுள் நுழைந்த 11 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். நேற்றைய தினம் (07) யாழ்ப்பாணம், நெடுந்தீவு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வடக்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த கடற்படையினரால் இக்கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, சட்டவிரோதமாக ஆழ இழுவை (bottom trawling) முறையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 3 படகுகளையும் அதில் இருந்த 11 மீனவர்களையும் கைது செய்துள்ளதாக, இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களை உரிய பிரிவினரிடம் ஒப்படைக்கவுள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.




அத்துமீறி 3 படகுகளில் நெடுந்தீவு கடற்பரப்பினுள் நுழைந்த 11 இந்திய மீனவர்கள் கைது Reviewed by Author on February 08, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.