அண்மைய செய்திகள்

recent
-

உலக மகிழ்ச்சி சுட்டெண்ணில் 146 நாடுகளில் இலங்கைக்கு 127ஆவது இடம்

ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தித் தீர்வுகள் வலையமைப்பின் அனுசரணையில் உருவாக்கப்பட்ட 'மகிழ்ச்சி சுட்டெண்' இல் இவ்வாண்டு இலங்கைக்கு 127ஆவது இடம் கிடைத்துள்ளது. 2021ஆம் ஆண்டில் இலங்கை 129ஆவது இடத்தைப் பெற்றிருந்தது. இதன்படி, 2022 மகிழ்ச்சி சுட்டெண்ணில் இலங்கை இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளது. அண்மைய உலக மகிழ்ச்சிக் குறியீட்டில் பின்லாந்து முதலிடத்திலும், டென்மார்க் இரண்டாவது இடத்திலும், ஐஸ்லாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளன

. இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது. இந்தக் குறியீட்டின்படி, இந்தியா 136ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 121ஆவது இடத்திலும், நேபாளம் 84ஆவது இடத்திலும், பங்களாதேஷ் 94ஆவது இடத்திலும் உள்ளன. உலக மகிழ்ச்சிக் குறியீடு என்பது மக்கள் மகிழ்ச்சி, பொருளாதார மற்றும் சமூகத் தரவுகளின் மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது. 

உலக மகிழ்ச்சி சுட்டெண்ணில் 146 நாடுகளில் இலங்கைக்கு 127ஆவது இடம் Reviewed by Author on March 21, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.