மன்னாரில் தொடர்ச்சியாக எரிவாயு தட்டுப்பாடு
அத்துடன் மண்ணெண்ணை கொள்வனவுக்காக நள்ளிரவு முதல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை மன்னாரில் நிலவி வருகிறது.
டீசல் தட்டுப்பாடு காரணமாக கிராமங்களுக்குள் பயணம் செய்யும் தனியார் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ள மையினால் நெடுந்தூர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் உரிய போக்குவரத்து வசதிகள் இன்மையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்கள் எரிபொருள் தட்டுப்பாட்டினால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் தொடர்ச்சியாக எரிவாயு தட்டுப்பாடு
Reviewed by Author
on
March 19, 2022
Rating:

No comments:
Post a Comment