அண்மைய செய்திகள்

recent
-

கால்வாயிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

கிளிநொச்சி – ஏ9 வீதியின் கரடிப்போக்கு சந்தியை அண்மித்த பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் நேற்று(28) மீட்கப்பட்டுள்ளது. கரடிப்போக்கு சந்தியை அண்மித்த பகுதியிலுள்ள கால்வாய் ஒன்றிலிருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொதுமக்களால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

 கிளிநொச்சி மாவட்ட நீதவான் மற்றும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டனர். உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு இதன்போது நீதவான் உத்தரவிட்டுள்ளார். வவுனியாவைச் சேர்ந்த 45 வயதான ஆணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கால்வாயிலிருந்து ஆணின் சடலம் மீட்பு Reviewed by Author on March 01, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.