மன்னாரில் 2022 ஆண்டுக்கான கிராம மட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்
குறித்த ஒன்று கூடலில் கீராம ரீதியாக இயங்கி வரும் பெண்கள் அமைப்புக்கள் மற்றும் நேசக்கரம் பிரஜைகள் குழு அங்கத்தவர்கள் ஊடாக 2022 ஆண்டு மேற்கொள்ளபட இருக்கின்ற கிராம,பிரதேச மட்ட செயற்பாடுகள் உள்ளக அபிவிருத்தி சமூக சேவை செயற்பாடுகள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது
அத்துடன்
கிராம மட்டத்தில் செய்யப்படவேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான குறைபாடுகளை இனம் கண்டு அவற்றை நிவர்த்தி செய்யக்கூடிய பிரதேச சபை மற்றும் நகரசபை,உள்ளூராட்சி மன்ற திணைக்களம் மற்றும் சிவில் சமூக நிறுவனக்களுக்கு தெரியப்படுத்தும் முகாம ஏற்பாடு செய்யப்படவுள்ள பொது கலந்துரையாடல் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது
குறித்த கலந்துரையாடலில் சாந்திபுரம்,ஜீவபுரம்,ஜிம்ரோன் நகர்,பள்ளிமுனை,உப்புக்குளம் பகுதிகளை சேர்ந்த பெண்கள் நேசகரம் பிரஜைகள் குழுவின் அங்கத்தவர்கள் வடமாகண கடற்தொழிலாளர் இணையத்தின் செயளாலர் மற்றும் மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அதிகாரி திருமதி.மேரி பிரியந்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்
மன்னாரில் 2022 ஆண்டுக்கான கிராம மட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்
Reviewed by Author
on
March 02, 2022
Rating:
No comments:
Post a Comment