அண்மைய செய்திகள்

recent
-

மருத்துவ பீடத்துக்கான மாணவர் எண்ணிக் கையை அதிகரிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானம்

2020 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்குத் தோற்றியவர்களில் மருத்துவ பீடத்துக்கு இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. புதிதாக 110 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப் பட்டுள்ளனர் என்று ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித் துள்ளார்.

 இதற்கமைய 2020 ஆம் ஆண்டில் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய உயிரி யல் பிரிவு மாணவர்கள் 1,974 பேர் மருத்துவ பீடத்துக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். 2019ஆம் ஆண்டில் மருத்துவ பீடத்துக்கு 1,961 மாணவர்களும் 2018 ஆம் ஆண்டில் 1,480 மாணவர்களும் இணைத்துக் கொள்ளப்பட்ட னரென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் உயர்தரத்துக்கு தோற்றிய மாணவர்களில் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்பட்டவர்களின் எண் ணிக்கை 43 ஆயிரத்து 500 வரை அதிகரிக்கப் பட்டுள்ளது.

மருத்துவ பீடத்துக்கான மாணவர் எண்ணிக் கையை அதிகரிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானம் Reviewed by Author on March 15, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.