அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி,இலுப்பைக்கடவை பகுதியில் ஒரு தொகுதி முதிரை மரக்குற்றிகளுடன் இருவர் கைது.

மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதி,இலுப்பைக்கடவை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (1) அதிகாலை 2.20 மணி அளவில் மிகவும் சூட்சுமமான முறையில் வாகனம் ஒன்றில் பதுக்கி கொண்டு செல்லப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான முதிரை மரக்குற்றிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப்படையினர் மற்றும் மடு வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் இணைந்து முன்னெடுத்த குறித்த நடவடிக்கைகளின் போது குறித்த மரக்கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.

 வாகனம் ஒன்றில் நெல் மூட்டைகளுக்கு கீழ் பதுக்கி வைத்து கொண்டு செல்லப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான சுமார் 22 முதிரை மரக்குற்றிகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட முதிரை மரக்குற்றிகள், வாகனம் மற்றும் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும், விசேட அதிரடிப்படையினர் மற்றும் மடு வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் இணைந்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி,இலுப்பைக்கடவை பகுதியில் ஒரு தொகுதி முதிரை மரக்குற்றிகளுடன் இருவர் கைது. Reviewed by Author on March 01, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.