இலங்கைக்கு கடத்த இருந்த இருதலை மணியன் பாம்பு, 6 கிளிகள் மீட்பு-2 பேர் கைது
அப்போது அவர்கள் ஒரு வாளியில் இருதலை மணியன் பாம்பு மற்றும் 6 பச்சைக் கிளிகளை வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவற்றை உயிருடன் மீட்ட தோடு, அவர்கள் வைத்திருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் குறித்த இருவரும் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
இருவரும் தூத்துக்குடி பகுதியிலிருந்து இரு தலை மணியன் வகை மண்ணுளி பாம்பும், கிளியையும் ரயில் மூலம் ராமேஸ்வரத்திற்கு கொண்டு செல்லத் திட்ட மிட்டிருந்ததும், அங்கிருந்து இலங்கை வழியாக சீனாவுக்கு கொண்டு செல்லப்பட இருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரும் வனப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு கடத்த இருந்த இருதலை மணியன் பாம்பு, 6 கிளிகள் மீட்பு-2 பேர் கைது
Reviewed by Author
on
April 05, 2022
Rating:

No comments:
Post a Comment