பொருளாதார நெருக்கடியினால் பதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கிவைப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுமார் 50 குடும்பங்களுக்கு ஏற்கனவே உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று 50 குடும்பங்களுக்கான உணவு பொதிகளே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டுள்ளது
பொருளாதார நெருக்கடியினால் பதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உணவு பொதிகள் வழங்கும் குறித்த நிகழ்வில் கிராம அலுவலர்களான எஸ் எப் சிபாயா ,எஸ்.ஜேசுரட்ணம், ஜே.அஜித்தன் சர்வோதய நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர் எஸ்.சத்தியகுமார் ஆகியோர் கலந்து கொண்டு உணவு பொதிகளை வழங்கி வைத்தனர்
இலங்கை முழுவதும் 25 மாவட்டங்களில் 10000 ற்கு மேற்பட்ட உணவு பொதிகள் வழங்கும் குறித்த செயற்றிட்டத்தின்கீழ் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் 400 உணவு பொதிகளும், கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவில் 400 உணவு பொதிகளும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் 250 உணவு பொதிகளும், மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவில் 200 உணவு பொதிகளும், துணுக்காய் பிரதேச செயலக பிரிவில் 200 உணவு பொதிகளும், வெலிஓயா பிரதேச செயலக பிரிவில் 50 உணவு பொதிகளுமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 1500 உணவு பொதிகள் மேற்படி செயற்திட்டத்தின் ஊடாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது
பொருளாதார நெருக்கடியினால் பதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கிவைப்பு
Reviewed by Author
on
April 23, 2022
Rating:
Reviewed by Author
on
April 23, 2022
Rating:











No comments:
Post a Comment