அண்மைய செய்திகள்

recent
-

சிறப்புற இடம்பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய மஞ்சம்

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய மஞ்ச உற்சவம் நேற்று(11) மாலை மிகவும் சிறப்புற இடம்பெற்றது வருடம் தோறும் பங்குனி திங்களின் இறுதி திங்கள் தினத்திலே வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் மஞ்ச உட்சவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெறுவது வழமை இருப்பினும் கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய கொரோனா மற்றும் பல்வேறு நிலைமைகள் காரணமாக 2020 ம் ஆண்டு இடம்பெறாத மஞ்ச உற்சவம் கடந்த ஆண்டு குறைந்தளவான பக்தர்களுடன் இடம்பெற்ற நிலையில் இம்முறை அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்புற இடம்பெற்றதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது

 பங்குனித் திங்களின் இறுதி திங்களான நேற்றைய நாளிலே ஆலயத்திலேயே விசேட வழிபாடுகள் இடம்பெற்றதோடு நேற்று மாலை ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் இடம்பெற்ற விசேட பூசைகளின் பின்னர் அம்மன்எழுந்தருளி உள் வீதி வலம் வந்து வெளிவீதியிலே மஞ்சத்தில் உலா வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தங்களுடைய நேர்த்திக் கடன்களை நிறைவு செய்தமையினையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது





















சிறப்புற இடம்பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய மஞ்சம் Reviewed by Author on April 12, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.