யாழ். பல்கலை மாணவர்களின் போராட்டம் எழுச்சி பேரணியாக மாறியது!
பேருந்து நிலையம் முன்பாக சுமார் ஒரு மணி நேரம் மாணவர்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கிருந்து, கஸ்தூரியார் வீதியூடாக ஸ்ரான்லி வீதியை அடைந்து அங்கிருந்து ஆரியகுள சந்தியை அடைந்து மீண்டும் பலாலி வீதியூடாக மாணவர்கள் பேரணி பல்கலையை அடைந்தது.
அதேவேளை மாணவர்கள் பேரணியாக ஸ்ரான்லி வீதியூடாக செல்லும் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகம் முன்பு சில நிமிடங்கள் தரித்து நின்று அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ். பல்கலை மாணவர்களின் போராட்டம் எழுச்சி பேரணியாக மாறியது!
Reviewed by Author
on
April 04, 2022
Rating:

No comments:
Post a Comment