அண்மைய செய்திகள்

recent
-

ஒட்டுசுட்டான் பிரதேச சமுர்த்தி அபிமாணி விற்பனைக் கண்காட்சி!

உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் முகமாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம், வடமாகாண தொழிற்துறை திணைக்களம் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு ஆகியன இணைந்து நடாத்தும் ஒட்டுசுட்டான் பிரதேச சமுர்த்தி அபிமாணி விற்பனைக் கண்காட்சி ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் அருகாமையில் நேற்றையதினம்(07) காலை 10.00மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் ப.ஜெயராணி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த புதுவருட விற்பனை சந்தையினை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து கலந்து கொண்ட அதிதிகள் மற்றும் பொதுமக்கள் விற்பனை மற்றும் கண்காட்சி கூடங்களை பார்வையிட்டு பொருட்கொள்வனவில் ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது. இந்த கண்காட்சி இன்றைய தினமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திரு.மு.முபாரக் குறித்த விற்பனை சந்தைகளுக்கு களவிஜயமொன்றை மேற்கொண்டு கண்காட்சியை நேரில் பார்வையிட்துடன் உற்பத்தியாளர்களை பாராட்டி அவர்களின் குறைநிறைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். புத்தாண்டை மையமாக வைத்து உள்ளூர் உற்பத்திகளின் சந்தை வாய்ப்புக்களை, உற்பத்திகளை பரவச்செய்வதே இதனுடைய நோக்கமாகும். குறித்த புதுவருட விற்பனை சந்தையானது முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலர் பிரிவுகளிலும் இரு தினங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது



















.
ஒட்டுசுட்டான் பிரதேச சமுர்த்தி அபிமாணி விற்பனைக் கண்காட்சி! Reviewed by Author on April 08, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.