அண்மைய செய்திகள்

recent
-

துணுக்காய் பிரதேச செயலக சமுர்த்தி அபிமாணி புதுவருட சந்தை!

உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் முகமாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் நடாத்தும் துணுக்காய் பிரதேச சமுர்த்தி அபிமாணி, புதுவருட விற்பனை சந்தை மற்றும் கண்காட்சி மல்லாவி சிவன்கோவில் வளாகத்தில் நேற்யைதினம் (07) காலை 10.00மணிக்கு துணுக்காய் பிரதேச செயலாளர் ஆ.லதுமீராவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த விற்பனை சந்தைக்கு கள விஜயமொன்றை மேற்கொண்ட மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் மு.முபாரக் கண்காட்சியை நேரில் பார்வையிட்துடன் உற்பத்தியாளர்களை பாராட்டி அவர்களின் குறைநிறைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். 

 மேலும் குறித்த கண்காட்சியில் கலந்து கொண்ட அதிதிகள் மற்றும் பொதுமக்கள் விற்பனை மற்றும் கண்காட்சி கூடங்களை பார்வையிட்டு பொருட்கொள்வனவில் ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது. புத்தாண்டை மையமாக வைத்து உள்ளூர் உற்பத்திகளின் சந்தை வாய்ப்புக்களை, உற்பத்திகளை பரவச்செய்வதே இதனுடைய நோக்கமாகக் கொண்ட இது இன்றைய தினமும் (08) இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த புதுவருட விற்பனை சந்தையானது முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலர் பிரிவுகளிலும் இரு தினங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது













துணுக்காய் பிரதேச செயலக சமுர்த்தி அபிமாணி புதுவருட சந்தை! Reviewed by Author on April 08, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.