கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய இலங்கை அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நேற்று சனிக்கிழமை (2) காலை ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 400 க்கும் மேற்பட்ட விசைப்படகில் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக விசைப்படகு ஒன்றையும் அதிலிருந்த 12 மீனவர்களையும் கைது செய்து விசாரணைக்காக மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.
கைது செய்யப்பட்ட 12 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை அரசை மீட்பதற்காக இந்திய அரசு பல கோடி ரூபாய் நிதி உதவி அளித்து வரும் நிலையில் எல்லை தாண்டியதாக 12 தமிழக மீனவர்களை கைது செய்ததற்கு ராமேஸ்வரம் மீனவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக கைது செய்யப்பட்ட மீனவர்களை படகுடன் விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய இலங்கை அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
Reviewed by Author
on
April 03, 2022
Rating:

No comments:
Post a Comment