மன்னாரில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கிவைப்பு
மன்னார் மாவட்டத்தில் உள்ள பின் தங்கிய கிராமங்களை சேர்ந்த சுமார் 25 குடும்பங்களுக்கு முதல் கட்டமாக இன்றைய தினம் அத்தியாவசிய பொருட்களான அரிசி ,பருப்பு,சீனி,நெத்தலி,சோயா,தேயிலை,வெங்காயம் உள்ளடங்களான அத்தியாவசிய பொருட்கள் உள்ளடங்கிய உணவு பொதிகளே மேற்படி வழங்கி வைக்கப்பட்டுள்ளது
குறித்த நிகழ்வில் டயலோக் நிறுவனத்தின் மாவட்ட பொறுப்பாளர் புத்திக ரண்டில் கலன் சூரிய ஹேமாஸ் நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதி சப்ரின் சர்வோதய நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர் சசிரேக்கா நகுலேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு உணவு பொதிகளை வழங்கி வைத்தனர்
இலங்கை முழுவதும் 25 மாவட்டங்களில் 10000 ற்கு மேற்பட்ட உணவு பொதிகள் மேற்படி செயற்திட்டத்தின் ஊடாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது
மன்னாரில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கிவைப்பு
Reviewed by Author
on
April 11, 2022
Rating:

No comments:
Post a Comment