அண்மைய செய்திகள்

recent
-

நீரில் மூழ்கி இருவர் பலி

நாட்டின் இரண்டு பிரதேசங்களில், நீரில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மரணங்களில் ஒன்று நேற்று (17) பண்டாரகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பண்டாரகம உயவத்த குளத்தில் நீராடச் சென்ற அத்துருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 மற்றைய மரணமும் நேற்று (17) கந்தர தலல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தலல்ல பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கிய குழுவொன்றை காப்பாற்றச் சென்ற அதே பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார். இவருடன் காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 42 வயதுடைய ஒருவரும் காணாமல் போயுள்ளார்.


நீரில் மூழ்கி இருவர் பலி Reviewed by Author on April 18, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.