அண்மைய செய்திகள்

recent
-

யாழில் இடம்பெற்ற விபத்தில் 10 வயது சிறுவன் உயிரிழப்பு – தாயின் கண்முன்னே நடந்த சோகம்!

யாழ். நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளின் மீது பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் சத்திர சந்தி பகுதியில் இன்று (திங்கட்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தாயும் மகனும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவேளை பின்னால் சென்ற பாரவூர்தி மோட்டார் சைக்கிளின் மீது மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த சிறுவன், வீதியில் விழுந்து பாரவூர்தியின் சக்கரத்திற்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

 இந்த சம்பவத்தில் யாழ்ப்பாணம் தாவடியைச் சேர்ந்த அபித்தன் அபிநயன் (வயது 10) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக அறிந்த யாழ்ப்பாண பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து, பாரவூர்தியின் சாரதியை கைது செய்ததுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


யாழில் இடம்பெற்ற விபத்தில் 10 வயது சிறுவன் உயிரிழப்பு – தாயின் கண்முன்னே நடந்த சோகம்! Reviewed by Author on April 11, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.