அண்மைய செய்திகள்

recent
-

அரச, தனியார் தொழிற்சங்கங்கள் நாளை வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கத் தீர்மானம்!

நாளை நாடளாவிய ரீதியில் ஒரு நாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச, அரை அரச, தோட்ட மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த அனைத்து தொழிற்சங்கங்களும் தீர்மானித்துள்ளன. நாளை தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தி போராட்டம் நடத்தப்படும் என அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளரான சந்தன சூரியஆராச்சி தெரிவித்தார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் போராட்டங்கள் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார். 

அரசாங்கம் தன்னிச்சையாகச் செயற்பட்டால், அதற்கு எதிராக கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படும். ஜனநாயக கட்டமைப்புக்குள் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என அவர் தெரிவித்தார். மக்கள் சொல்வதை நிர்வாகம் செவிமடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

அரச, தனியார் தொழிற்சங்கங்கள் நாளை வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கத் தீர்மானம்! Reviewed by Author on April 07, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.