முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் துண்டுபிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கை
அதனைவிட முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் இன்று மாலை வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பிரதமகுரு அவர்களை சந்தித்து தங்களுடைய நிலைப்பாடு தொடர்பில் தெளிவுபடுத்தி ஆலய குரு அவர்களுக்கு தங்களுடைய துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்
அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு கூழாமுறிப்பு பங்குதந்தை அவர்களை சந்தித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர்கள் அவரிடமும் தங்களுடைய நிலைப்பாடுகளை தெரிவித்து துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர் அதனை தொடர்ந்து முள்ளியவளை தண்ணீரூற்று நகர்ப்பகுதிகளில் உள்ள வர்த்தகர்கள் பொதுமக்கள் என பலதரப்பட்டவர்களும் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தனர்
மாவட்ட வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறுவதற்காக வருகை தந்த நோயாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் அவர்கள் துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்
இதன்போது கருத்து தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் இந்த நிலைமைகளுக்கு காரணமான இந்த பாராளுமன்றத்தில் இருக்கின்ற அனைத்து உறுப்பினர்களும் விலகி நல்லதொரு மக்களுக்கு சேவையாற்றக்கூடிய ஊழலற்ற ஒரு பாராளுமன்றத்தின் பிரதிநிதிகளை ஜனநாயக முறைப்படி உருவாக்குவதற்கு அனைத்து தரப்பினரும் உடன்பட்டு அந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் துண்டுபிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கை
Reviewed by Author
on
May 06, 2022
Rating:

No comments:
Post a Comment