அண்மைய செய்திகள்

recent
-

மக்கள் விடுதலை முன்னணியினர் விசுவமடுவில் போராட்டம்

மக்கள் விடுதலை முன்னணியை சேர்ந்த சிலர் இன்று விசுவமடு நகர் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் இன்று நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது இந்நிலையில் ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்தும் அதேபோன்று தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற போராட்டங்களுக்கு தங்களுடைய ஆதரவை வழங்கும் முகமாகவும் இந்த கொடுங்கோல் அரசை ஆட்சியை விட்டு வெளியேறுமாறும் வலியுறுத்தி இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது 

 இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 74 வருட சாபக்கேட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்போம், விலைவாசியை உடனடியாக குறைத்துவிடு,மக்களை வதைக்கும் அரசாங்கத்தை விரட்டியடிப்போம் ,முள்ளிவாய்க்காலில் அபகரித்த தங்க நகைகள் எங்கே? போன்ற பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு கோசங்களை எழுப்பியவாறும் விசுவமடு நகர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் 
















-
மக்கள் விடுதலை முன்னணியினர் விசுவமடுவில் போராட்டம் Reviewed by Author on May 06, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.