அண்மைய செய்திகள்

recent
-

வெற்றிலைக்கேணியில் குடும்பஸ்தரைக் கொன்று புதைத்த மனைவி – பொலிஸ் விசாரணையில் தகவல்!

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நபர் மனைவியினால் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக மருதங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, விநாயகபுரம், வெற்றிலைக்கேணி, முள்ளியான் என்ற முகவரியைச் சேர்ந்த தாசன் சிவஞானம் (வயது 42) என்ற நபர் நேற்றைய நாள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் அது குறித்த தகவல் இன்று வெளியாகியிருந்தது.

 சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட மருதங்கேணி பொலிஸார், முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவரின் மனைவியும் பிறிதொரு நபரும் இணைந்து கொலை செய்து புதைத்தமை தொடர்பில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். நீதிமன்ற அனுமதியின் பின்னர் சடலம் அகழ்ந்தெடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்


.
வெற்றிலைக்கேணியில் குடும்பஸ்தரைக் கொன்று புதைத்த மனைவி – பொலிஸ் விசாரணையில் தகவல்! Reviewed by Author on May 10, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.