மஹிந்த ராஜபக்ஸவை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரிக்கை
அலரி மாளிகைக்குள் செல்லும் போது அவர்களிடம் வாள், பொல்லுகள் என்பன இருக்கவில்லை எனவும் அங்கு நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் அவர்கள் வௌியே வரும்போது பாரிய அளவிலான வாள்கள், பொல்லுகளை ஊடகங்கள் வாயிலாக காணக்கூடியதாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
இந்த குண்டர்கள், முதலில் மைனாகோகமவை தாக்க சென்றதையும் காணக்கூடியதாக இருந்ததாக சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க தெரிவித்தார்.
இவர்கள் இவ்வாறு செல்லும் போது புலனாய்வு அதிகாரிகள் எங்கு சென்றார்கள் என அவர் கேள்வியெழுப்பியதுடன், போராட்டக்களத்தில் தாக்குதல் மேற்கொள்வதற்கு பொலிஸார் இடமளித்ததாகவும் அவர் கூறினார்.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டிய வன்னிநாயக்க, இந்த தாக்குதலுக்கு பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபர், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களும் உதவியதாக தெரிவித்தார்.
இதனால் இந்த குழுவிற்கு எதிராக உடனடியாக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என சட்டத்தரணி வன்னிநாயக்க மேலும் தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஸவை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரிக்கை
Reviewed by Author
on
May 10, 2022
Rating:
Reviewed by Author
on
May 10, 2022
Rating:


No comments:
Post a Comment