மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 13ம் ஆண்டு நினைவு பேரணி
இதன் தொடக்கத்தில் கறிற்ராஸ்-வாழ்வுதயத்தின் இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் அடிகளார் அவர்களினால், நிகழ்வு நோக்கு தொடர்பாக கூறி அனைத்து மக்களையும் வரவேற்றதனை தொடர்ந்து, மன்னார் மறை மாவட்ட குருமுதல்வர் அருட்பணி கிறீஸ்து நாயகம் அடிகளாரின் ஆரம்ப அஞ்சலி உரை இடம் பெற்றது.
அதனைத் தொடர்ந்து கறிற்ராஸ்-வாழ்வுதய பணியாளர்களின் தலைமையில் அனைத்து மக்களும் பவனியாக நகர சுற்று வட்டம் ஊடாக புனித செபஸ்தியார் பேராலயத்தினைசென்றடைந்து,அங்கு புனித செபஸ்தியார் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி அகஸ்ரீன் புஸ்பராஜா அடிகளாரின் ஏற்பாடு செய்யப்பட்ட செபவழிபாடு நற்கருணை ஆராதனையும் இடம்பெற்றது.
இதில் போரினால் இறந்த அனைத்து ஆன்மாக்களின் ஈடேற்றத்திற்காகஇபங்குபற்றியஅனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இவ் அனுஸ்டிப்புநிகழ்வில் மன்னார் மறைமாவட்ட அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பொதுநலையினர்,சமூகஆர்வலர்கள் என நுற்றுக்கணக்கானோர் கலந்துதமது இதய அஞ்சலியினைதெரிவித்து இறைவேண்டலில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 13ம் ஆண்டு நினைவு பேரணி
Reviewed by Author
on
May 18, 2022
Rating:

No comments:
Post a Comment