சிறையில் இருந்து தப்பிய கைதிகள் கடல் வழியாக தமிழகம் வரக்கூடும் என்பதால் கடலோர பகுதிகளில் ரோந்து பணி
இதையடுத்து இலங்கையில் ஆளும் அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட எம் பி க்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வீடுகள் மற்றும் வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீயிட்டு எரித்து சேதப்படுத்தினர்.
இதையடுத்து இலங்கை சிறையில் இருந்து தப்பிய 50க்கும் மேற்பட்ட கைதிகள் கடல்வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடுத்து கடலோர பகுதிகளில் பாதுகாப்பு துரிதப்படுத்தவும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் இலங்கைக்கு அருகில் தனுஷ்கோடி, ராமேஸ்வரம் பகுதிகள் உள்ளதால் கடல் வழியாக சமூக விரோதிகள் ஊடுருவ கூடும் என்பதால் தமிழக கடலோர காவல் குழும போலீசார் 5 அதி நவீன படகுகளிலும், இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான நீரிலும், தரையிலும் செல்லக்கூடிய அதிநவீன ஹோவர் கிராப்ட் மூலம் தனுஷ்கோடி, அரிச்சல்முனை, மண்டபம், சங்குமால், தொண்டி உள்ளிட்ட எளிதாக கடல் வழியே தமிழகத்துக்குள் நுழைய கூடிய பகுதிகளாக கருதப்படும் இடங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோன்று தனுஷ்கோடி பகுதியில் கியூ பிராஞ்ச் போலீசார் மற்றும் மத்திய உளவுப் பிரிவினர் இரவு, பகலாக தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறையில் இருந்து தப்பிய கைதிகள் கடல் வழியாக தமிழகம் வரக்கூடும் என்பதால் கடலோர பகுதிகளில் ரோந்து பணி
Reviewed by Author
on
May 13, 2022
Rating:

No comments:
Post a Comment