அண்மைய செய்திகள்

recent
-

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற கடையடைப்புக்கு முல்லைத்தீவிலும் ஆதரவு

நாடளாவிய ரீதியில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல்வேறு தரப்பினரும் ஹர்த்தாளுக்கு தமது பூரண ஆதரவினை வழங்கியுள்ளனர் அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு நகரம் முள்ளியவளை தண்ணீரூற்று உடையார்கட்டு விசுவமடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வர்த்தக நிலையங்கள் பெருமளவில் மூடி இருந்ததோடு வங்கி நடவடிக்கைகள் அனைத்தும் முற்றுமுழுதாக செயலிழந்திருந்தன இதனை விட முல்லைத்தீவு மாவட்டத்தின் தனியார் போக்குவரத்து கழகத்தினரும் முழுமையாக போராட்டத்துக்கு ஆதரவை வழங்கினர் 

 வர்த்தக நிலையங்கள் மாத்திரமன்றி சந்தை வளாகங்கள் பல மூடி இந்த போராட்டத்திற்கான பூரண ஆதரவு வழங்கப்பட்டதோடு பல அரச திணைக்களங்களும் அதிகாரிகளின் வரவுகள் குறைவாகவும் சில அரச திணைக்களங்கள் மூடிய நிலையிலும் காணப்பட்டன பாடசாலைகள் ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக இயங்கவில்லை இவ்வாறாக முல்லைத்தீவு மாவட்டத்திலும் இன்றைய ஹர்த்தாளுக்கு ஆதரவு வழங்கி பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது












நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற கடையடைப்புக்கு முல்லைத்தீவிலும் ஆதரவு Reviewed by Author on May 06, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.