பெற்றோர் தவறு தான்!
ஐந்தாம் வகுப்பு வரை மகன் அங்கு படித்து முடித்ததும், பெங்களூருக்கு அழைத்து வந்தேன். இனி குறையில்லா மாணவர்கள் படிக்கும் சாதாரண பள்ளியில் படித்தால் தான், மகனால் ஓரளவாவது, மற்றவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்ள முடியும், ஓரளவுக்குப் பேசவும் முடியும் என்று நினைத்தேன். ஆனால், அத்தகைய பள்ளிகள் என் மகனைச் சேர்த்துக் கொள்ள முன்வரவில்லை. கெஞ்சிக் கூத்தாடி கடைசியில் ஒரு பள்ளியில் சேர்த்தோம். அது, அவன் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பம்.மகன் பிறந்து ஏழு ஆண்டுகளுக்கு பின் மரியா, ஸாரா பிறந்தனர்.
அவர்களுக்கும் காது கேட்கவில்லை. நாங்களே பயிற்சி கொடுத்து, மகன் படித்த பள்ளியிலேயே சேர்த்தோம். மகள்களுக்கு நடனம், ஓவியம் வரைதல் போன்றவற்றை, என் மனைவி சொல்லித் தந்தார்.
மரியா 'சார்ட்டட் அக்கவுன்டன்சி' படிக்க, ஸாரா சட்டம் படித்தாள்.மகன், அமெரிக்காவில் எம்.எஸ்., முடித்து விட்டு டெக்ஸாசில் ஒரு கணினி நிறுவனத்தில் பணிபுரிகிறான்.
கேலி, கிண்டல்களை தாண்டி என் பிள்ளைகள் சாதிக்கின்றனர்.நல்ல முறையில், எந்தக் குறைபாடும் இன்றி பிறந்த குழந்தைகளைப் பெற்ற அப்பா, அம்மாக்கள் பலர், தங்கள் குழந்தைகள் அப்படி இல்லையே, இப்படி இல்லையே என்று குறைபட்டுக் கொள்கின்றனர். அனைத்துக்கும், அந்த குழந்தைகளையே குற்றம் சொல்கின்றனர். உண்மையில், கடவுள் நல்ல குழந்தைகளைக் கொடுத்தும், அவர்களை நல்ல திறமைசாலிகளாக வளர்க்க தவறுவது பெற்றோர் தான்.
பெற்றோர் தவறு தான்!
Reviewed by Author
on
May 01, 2022
Rating:

No comments:
Post a Comment