அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலில் இடம் பெற்ற புனித நோன்பு பெருநாள் தொழுகை

இஸ்லாமிய மக்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர். நாட்டின் பல பிரதேசங்களில் இஸ்லாமியர்கள் புனித நோன்புப் பெருநாளை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய மக்களும் இன்றைய தினம் (3) நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றனர். -மன்னார் மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) காலை 8 மணியளவில் பெருநாள் தொழுகைகள் இடம் பெற்றது.

காலை 7 மணிக்கு பெண்களுக்கும் காலை 8 மணியளவில் ஆண்களுக்கும் பெருநாள் தொழுகை இடம் பெற்றது. குறித்த பெருநாள் தொழுகை மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலின் மௌலவி எம்.அஸீம் தலைமையில் நடைபெற்றது.இதன் போது நோன்பு பெரு நாளின் முக்கியத்துவம், அல்குர்ஆன் சமய நற்சிந்தனைகள், பற்றியும் இங்கு எடுத்து கூறப்பட்டது. மேலும் மாவட்டத்தில் உள்ள ஏனைய பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகைகள் இடம்பெற்றது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் மன்னார் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய மக்கள் அமைதியான முறையில் நோன்பு பெருநாளை கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.










மன்னார் மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலில் இடம் பெற்ற புனித நோன்பு பெருநாள் தொழுகை Reviewed by Author on May 03, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.