அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரை வந்தடைந்த இந்திய நிவாரணப் பொதிகள் மக்களிடம் கையளிக்கும் நடவடிக்கை ஆரம்பம்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா தமிழ்நாட்டு மக்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவு பொருட்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை (30) மாலை மன்னாரில் வழங்கி ஆரம்பித்து வைக்கப்பட்டது. மன்னார் மாவட்டத்தில் 25,000 குடும்பங்களுக்கு வழங்குவதற்காக 2 லட்சத்து 50 ஆயிரம் கிலோ அரிசி மற்றும் பால் மா இன்றைய தினம் திங்கட்கிழமை (30) காலை மன்னார் பிரதேச செயலகத்தில் வைத்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

 இந்த நிலையில் குறித்த பொருட்களை வழங்கி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (30) மாலை 4 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது இந்திய துணை தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் கலந்து கொண்டு மக்களுக்கான உலர் உணவு பொதியை வழங்கி வைத்தார். குறித்த நிகழ்வில் இந்திய துணை தூதரக தலைமை அதிகாரி ராம் மகேஷ்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் போது முதல் கட்டமாக 60 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
















மன்னாரை வந்தடைந்த இந்திய நிவாரணப் பொதிகள் மக்களிடம் கையளிக்கும் நடவடிக்கை ஆரம்பம். Reviewed by Author on May 30, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.