மன்னாரில் மண்ணெண்ணை தட்டுப்பாடு-மீனவர்கள் பாதிப்பு-கடல் உணவுகளின் விலையும் அதிகரிப்பு.
இதனால் மீனவர்கள் உட்பட மீன் சந்தையில் மீன் வியாபாரத்தில் ஈடுபடும் மீன் வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர்.
மேலும் அண்மைய நாட்களாக மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடாமையால் மீன் சந்தையில் மீன்களின் வருகையும் குறைந்துள்ளது.
இதன் காரணமாக மீன் விலையும் அதிகரித்துள்ளது. மீன் விலை அதிகரித்துள்ளமையினால் மீன்களை கொள்வனவு செய்யும் மக்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக மீன் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மீன்பிடி இன்மை மற்றும் மீன் வியாபாரம் தொடர்ச்சியாக குறைந்துள்ள மையினால் மீன் சந்தைகளை குத்தகை ரீதியாக பெற்று நடத்தும் குத்தகை தாரர்கள் வருமானம் இன்றி பாதிப்படைந்துள்ளனர்.
எனவே விரைவில் மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் போதிய அளவில் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாட்டை மேற்கொண்டு தருமாறு மீனவர்கள் மற்றும் மீன் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
மன்னாரில் மண்ணெண்ணை தட்டுப்பாடு-மீனவர்கள் பாதிப்பு-கடல் உணவுகளின் விலையும் அதிகரிப்பு.
Reviewed by Author
on
June 15, 2022
Rating:

No comments:
Post a Comment