அண்மைய செய்திகள்

recent
-

யுவதியை வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்த வைத்தியருக்கான மரண தண்டனை உறுதியானது!

மருத்துவ ஆலோசனையை பெற்றுக்கொள்வதற்காக சென்ற திருமணம் முடிக்காத இளம் பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தி, கொலை செய்த குற்றத்திற்காக மருத்துவர் ஒருவருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் சம்பந்தப்பட்ட மருத்துவர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

 சிகிச்சைக்காக வந்த பெண்ணை தனது அறைக்குள் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை, ஆறாவது மாடியில் ஜன்னல் ஒன்றின் ஊடாக கீழே தள்ளி கொலை செய்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றவாளியான மருத்துவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மரண தண்டனையும் 15 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் என்பன நியாயமான மற்றும் சட்டத்திற்கு அமைய நீதியான தீர்ப்பு என்பதை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தி அறிவித்துள்ளது. 2007 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் திகதி நீர்கொழும்பு ஆதர வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப் பிரிவில் சேவையாற்றிய மருத்துவர், யுவதியை வன்புணர்வுக்கு உட்படுத்தி, கொலை செய்தமை தொடர்பில் நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த 2014 ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.


யுவதியை வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்த வைத்தியருக்கான மரண தண்டனை உறுதியானது! Reviewed by Author on June 16, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.