அண்மைய செய்திகள்

recent
-

கரும்புள்ளியான் கிராம அலுவலருக்கு கௌரவிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட கரும்புள்ளியான் கிராம மக்களால் கிராம அலுவலர் கௌரவிக்கப்பட்டார் இன்று காலை கிராம மக்களால் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வு கரும்புள்ளியான் கிராம பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது மக்களால் வீதிவழியாக நிகழ்வு மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டார் நிகழ்வின் கதாநாயகனான கிராம அலுவலர் .மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலர்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,பிரதேச சபை உறுப்பினர்கள் பிரதேச மட்ட கிராம அமைப்பினர் , பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர் 

 இதில் கிராம அலுவலருக்கு வாழ்த்து மடல்களும் ,நினைவுச்சின்னங்களும் பிரதேச மக்களால் வழங்கப்பட்டன இதே வேளை மாவட்ட ரீதியில் இடம்பெற்ற கிராமங்களுக்கிடையேயான முகாமைத்துவ போட்டியில் பிரேதேச செயலகத்திற்குள் 1வது இடத்தினையும் ,முல்லைத்தீவு மாவட்டத்தில் 4வது இடத்தினையும் கரும்புள்ளியான் கிராமம் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது 















கரும்புள்ளியான் கிராம அலுவலருக்கு கௌரவிப்பு Reviewed by Author on June 16, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.