எரிபொருள் வரிசையில் ஒன்றரை நாள் காத்திருந்தவர் மரணம்
கடந்த 18 ஆம் திகதி பண்டராகமையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முச்சக்கர வண்டிக்கு எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக சென்று வீடு திரும்பிய பின்னரே குறித்த நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் போது குறித்த நபர் ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் 42 வயதுடைய பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் வரிசையில் ஒன்றரை நாள் காத்திருந்தவர் மரணம்
Reviewed by Author
on
June 21, 2022
Rating:

No comments:
Post a Comment