உயர்தர மாணவர்களுக்கு கல்வி அமைச்சரின் அறிவிப்பு
ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, “க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்துவதற்கான ஆயத்தங்கள் நடைபெற்று வருகின்றன.
2023 ஆம் ஆண்டு தொடங்கும் முன், பாடசாலை கள் பெரும்பாலும் டிசம்பர் 22, 23 வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம். அந்த நேரத்தில், கல்வித் துறையிலுள்ள அனைத்து பங்குதாரர்களுடனும் நாங்கள் விவாதிப்போம். மாணவர்களுக்கு அதிகபட்ச பாடசாலை நாட்களை வழங்குவோம் மற்றும் 2022 பாடத்திட்டத்தை பூர்த்தி செய்வதற்குத் தேவையான சூழலை பாடசாலைகளில் உருவாக்குவோம்” என்றார்.
உயர்தர மாணவர்களுக்கு கல்வி அமைச்சரின் அறிவிப்பு
Reviewed by Author
on
June 02, 2022
Rating:

No comments:
Post a Comment